“திருவை அழகாக காட்டியதற்கு நன்றி ஷோபனா” – விருது பெற்ற தனுஷ் நெகிழ்ச்சி பதிவு!

“திருவை அழகாக காட்டியதற்கு நன்றி ஷோபனா” – விருது பெற்ற தனுஷ்  நெகிழ்ச்சி பதிவு!

தனுஷ் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இந்த திரைப்படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்க கலாநிதி மாறன் தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தில் தனுஷ் , நித்தியாமேனன் , பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூலை வாரி குவித்தது. பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி ரூபாய் 110 கோடி. வசூலித்த இந்த திரைப்படம் மாபெரும் கலெக்சனைப் பெற்று இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கு பிலிம் பேர் விருது கிடைத்திருப்பதை தனுஷ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். அதாவது திருச்சிற்றம்பலத்தின் நாயகன் , நாயகிக்கு விருது கிடைத்திருப்பது குறித்து தனுஷ் பதிவிட்டு இருப்பதாவது “திருவை அழகாக காட்டியதற்கு நன்றி ஷோபனா” என கூறி இணையத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதள வாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகர் தனுஷ் , ஷோபனா , Actor dhanush shobhana , cinema news , Thiruchitrambalam movie

Thiruchitrambalam movie get filmfare award