எனக்கு கனவு போல இருந்தது…. ரஜினிகாந்துடன் நடித்தது பற்றி துஷாரா விஜயன் பெருமிதம்!

எனக்கு கனவு போல இருந்தது…. ரஜினிகாந்துடன் நடித்தது பற்றி துஷாரா விஜயன் பெருமிதம்!

கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை தொண்டு கவர்ச்சி அழகை தெறிக்கவிட்டு சினமாவில் அறிமுகமான புதிதிலே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை துஷாரா விஜயன். இவர் முதன்முதலில் போதையேறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக சினிமாவில் அறிமுகமாக இருந்தார்.

அதை எடுத்து பா ரஞ்சித் இயக்கி ஆர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் மாரியம்மா என்ற ரோலில் ஆர்யாவின் மனைவியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் வசப்படுத்தி இழுத்தார்.

அப்படத்தில் இவரது நடிப்பும் மெட்ராஸ் பாஷை பேசி அசத்திய அந்த பேச்சும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தது. மேலும் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டுவிட்டார். இந்த திரைப்படம் அவரது ரேஞ்சே வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது. இப்படத்திற்கு பிறகு திவ்யா பாரதி அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூக்கன், அநீதி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் படு கவர்ச்சியான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரும் கவனத்தை ஈர்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். நல்ல கட்டு மஸ்தான உடல் தோற்றத்திற்கு ஏற்றவாறு கவர்ச்சி அழகை காட்டுவதை கைவந்த கலையாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வேட்டையன் படம் குறித்து துஷாரா விஜயன் பேசியுள்ளார். அதில், இந்த படத்தில் முதல் காட்சியில் ரஜினியுடன் மறுநாள் நடிக்கவிருந்த சூழலில் அதற்கு முந்தைய நாள் தனக்கு காய்ச்சலே வந்து விட்டது. அவருடன் இணைந்து நடித்தது தனக்கு கனவு மாதிரி இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த படத்தில் தனக்கு மிகவும் வெயிட்டான ரோல் கிடைத்ததாகவும் துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார். இதேபோல் பகத் பாசில் மிகப்பெரிய நடிகர் என்றும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் வேட்டையன் படம் தனக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் துஷாரா மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

priya-bhavani-shankar-hurt-abour-adjustment-issues