அட்ஜெஸ்ட்மென்ட் பத்தியே கேட்குறாங்க… பிரியா பவானி ஷங்கர் வேதனை!

அட்ஜெஸ்ட்மென்ட்  பத்தியே கேட்குறாங்க… பிரியா பவானி ஷங்கர் வேதனை!

தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளினியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து அதன் பின்னர் சீரியலில் நடித்து சின்னத்திரை சீரியல் நடிகையாக பிரபலமானவர்தான் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த ஹீரோயினாக பார்க்கப்பட்டார்.

அதை அடித்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் துவங்க மேயாத மான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து நல்ல அடையாளத்தை ஏற்படுத்தியது. அதை எடுத்து கடை குட்டி சங்கம் மான்ஸ்டர் மாஃபியா களத்தில் சந்திப்போம் கசடதபர உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இதனுடைய கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே ராஜவேலு என்ற காதலனை காதலித்து இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரியா பவானி ஷங்கர், நான் பத்து தல படத்தில் நடித்திருந்த போது கொடுத்த ஒவ்வொரு பேட்டியிலும், சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கா? என்று கேட்கிறார்கள். அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். இதற்கு முன் இதை என்னிடம் யாரும் கேட்டதில்லை. நான் என்ன சொல்வதை நீங்கள் விரும்புகிறீர்கள்.

நான் ஒரு படத்தில் நடிக்கும் போது இந்த கேள்வி ஏன் வருகிறது. இதை ஒரு ஹீரோவிடம் நீங்கள் கேட்பீர்களா?. உங்கள் படத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கா? என்று கேட்பீர்களா. யாரும் இதை செய்தேன், வேறுவழியை பயன்படுத்தினேன் என்று சொல்லமாட்டார்கள் என கோபமாக கூறினார்.

பிரியா பவானி ஷங்கர் , priya bhavani shankar , cinema news, kollywood news

priya-bhavani-shankar-hurt-abour-adjustment-issues