உச்சத்தில் இருக்கும்போதே அம்பிகா அட்ரஸ் இல்லாமல் போக காரணம் இது தான்!

உச்சத்தில் இருக்கும்போதே அம்பிகா அட்ரஸ் இல்லாமல் போக காரணம் இது தான்!

நடிகை ராதாவின் சகோதரியு தமிழ் சினிமாவின் பிரபல நடிகையுமாக பார்க்கப்பட்டவர் தான் அம்பிகா. இவர் 70 மற்றும் 80களில் நட்சத்திர நடிகையாக ஜொலித்து வந்தார். குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தமிழில் ஹீரோயினாக பல்வேறு திரைப்படங்களில் ரஜினி கமல் சிவாஜி உள்ளிட்ட பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

இதனிடையே முன்னணி நடிகையாக இருக்கும்போதே அம்பிகாவுக்கு வாய்ப்புகள் பரிபோனது அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பிரபல பத்திரிகையாளர்கள் காந்தராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது நடிகை அம்பிகா மிக சீக்கிரத்திலேயே திருமணம் செய்து கொண்டதால் தான் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

அதுமட்டுமில்லாமல் அவர் வயதானவர் தோற்றத்தை காண்பித்து முகச்சுருக்கம் ஏற்பட்டதும் ஒரு காரணம். அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள பலர் சிபாரிசு செய்தார்கள். ஆனால் அம்பிகா அத செய்யவே இல்லை. உச்சத்தில் இருக்கும்போதே காதல் பரிசு திரைப்படம் தியேட்டரில் போகும்போது கிழவி வந்துட்டா என்று ரசிகர்கள் கத்துவதை நானே கேட்டிருக்கிறேன் என காந்தராஜ் கூறியிருக்கிறார் எனவே அம்பிகா இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டதும், வயதானவர் போன்று முகச்சுருக்கம் ஏற்பட்டது தான் அவரது சினிமாக்களில் கெரியர் காலியானதற்கு காரணம் என காந்தராஜ் கூறியிருக்கிறார்.