நான் நடிகையாகவில்லை என்றால்… நயன்தாரா சொன்ன விஷயத்தை கேளுங்க!

நான் நடிகையாகவில்லை என்றால்… நயன்தாரா சொன்ன விஷயத்தை கேளுங்க!

“ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தமிழ் தமிழை தாண்டி தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகர் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பம் குழந்தை என பிசியாக இருந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வரும் நயன்தாரா சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தான் சினிமாவில் நுழையவில்லை என்றால் எனது லட்சியத்தை நோக்கி பயணித்திருப்பேன் என கூறியிருக்கிறார். அதில் அவர், ஒரு நாளும் நான் சினிமா துறையில் இவ்வளவு பெரிய உயரத்தை அடைவேன் என்று எண்ணியதில்லை. சினிமாவில் நடிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நிச்சயமாக ஒரு Auditorஆக இருந்திருப்பார் என்று அடிக்கடி அவருடைய உறவினர்கள் கூட சொல்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

நயன்தாரா , nayanthara, cinema news , kollywood news , latest cinema news