விருது வாங்க வந்தாரா இறுக்கமான கறுப்பு உடையில் மிருணால் தாகூர் சொக்க வைக்கும் புகைப்படங்கள்

விருது வாங்க வந்தாரா இறுக்கமான கறுப்பு உடையில் மிருணால் தாகூர் சொக்க வைக்கும் புகைப்படங்கள்

பாலிவுட் திரை உலகில் பிரபல இளம் நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகை மிருனாள் தாகூர். இவர் முதல் முதலில் சீரியல் நடிகையாக தனது கெரியரை துவங்கி அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வெகு சில வருடத்திலேயே இவருக்கு தொடர்ச்சியான ஹிட் படங்கள் கிடைத்தது. இந்தியை தாண்டி தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் துல்கர் சல்மானுடன் இணைந்து சீதாராமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் தென்னிந்தியா சினிமாவில் பேசப்பட்ட படமாக அமைந்தது.

இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்துள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் , என் இதயத்தில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் சீதா ராமம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றதில் என் இதயம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

தெலுங்கில் எனது அறிமுகமானது எனக்கு ஒரு புதிய வாழ்க்கைப் பாதையை மட்டுமல்ல, நிபந்தனையின்றி என்னை ஆதரிக்கும் பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான அன்பையும் அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.

மிருணால் தாகூர், சீதா ராமம், mrunal thakur , mrunal thakur