“வரலட்சுமியின் முதல் காதலன் நான் இல்லை”.. பகீர் கிளப்பிய கணவர்!

“வரலட்சுமியின் முதல் காதலன் நான் இல்லை”.. பகீர் கிளப்பிய கணவர்!

நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தொடர்ந்து சர்க்கார் மற்றும் தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்து தனது வேறொரு ரூபத்தை வெளிகாட்டினார்.

வரலட்சுமி நடிப்பு குறிப்பாக பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது என்று சொல்லலாம். இதனிடையே மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் என்ற தொழிலதிபரை 14 வருடங்களாக காதலித்து தற்போது பெற்றோர் சம்பந்தத்துடன் அண்மையில் தான் திருமணம் செய்து கொண்டார் . இந்த திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு வரலட்சுமி, நிக்கோல் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அதில் நிக்கோல் பேசும்போது, நான் வரலட்சுமியின் முதல் காதல் கிடையாது, சினிமா தான் அவரது முதல் காதல், நான் இரண்டாவது தான் என கலகலப்பாக பேசியுள்ளார்.