மாமனார் டார்ச்சரால் மும்பைக்கு சென்ற ஜோதிகா…? சர்ச்சைக்கு பதில்!

மாமனார் டார்ச்சரால் மும்பைக்கு சென்ற ஜோதிகா…? சர்ச்சைக்கு பதில்!

கொழுக் மொழுக் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பெயர் எடுத்தவர் ஜோதிகா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அவருடன் நட்பாக பழகி பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஹிந்தி திரைப்படங்களை கவனத்தில் செலுத்தி வரும் நடிகை ஜோதிகா மும்பைக்கு தனிக்குடித்தனம் குடித்தனம் சென்றுவிட்டார்.

இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் கணவரை அழைத்துக்கொண்டு தனிக்குடித்தனம் சென்றுவிட்டீர்கள் என்று வெளியான சர்ச்சை செய்திகளுக்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்தார். அதாவது, “கொரோனா காலகட்டத்தில் என்னுடைய பெற்றோருக்கு பல முறை பாதிப்பு ஏற்பட்டது.

அவர்களை பார்க்க என்னால் மும்பைக்கு செல்ல முடியவில்லை. அதனால் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே சென்று அவர்களுடன் சில காலம் இருக்கலாம் என முடிவு செய்தேன். அதனால் தான் மும்பைக்கு வந்து செட்டில் ஆனேன்” என ஜோதிகா கூறி இருக்கிறார்.