“ஆடுகளம்” படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

“ஆடுகளம்” படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆடுகளம். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அதிக வசூல் ஈட்டி பெரும் சாதனை படைத்தது. சேவல் சண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தேசிய விருதை பெற்று மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது.

வித்தியாசமான கதைகளத்தில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று தனுஷின் கெரியரிலே மிக முக்கிய படமாக அமைந்தது. இந்நிலையில் படத்தை குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

அதாவது இப்படத்தில் “பேட்டைக்காரன்” என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் தான் ஜெயபாலன். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் ஜெயபாலன் கிடையாதாம். நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தான். ஆம், ஆடுகளம் திரைப்படத்தில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நடிகர் பார்த்திபன் என்ற தகவல் எல்லோரையும் வியப்படைய வைத்துள்ளது.