கணவரை விவகாரத்து செய்த ஐஸ்வர்யா ராய்…? மகளுடன் திருமணத்தில் பங்கேற்பு!

கணவரை விவகாரத்து செய்த ஐஸ்வர்யா ராய்…? மகளுடன் திருமணத்தில் பங்கேற்பு!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் முதன் முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலமாகத்தான் சினிமா உலகத்திலேயே அறிமுகமானார். முன்னதாக 1994 ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய் அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

தமிழ் சினிமாவில் தனது திரை பயணத்தை துவங்கிய ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நேற்று மும்பையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனிமையாக வந்து பங்கேற்றுக் கொண்டார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி சர்ச்சைக்குரிய விஷயமாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா ராய் தனது புகுந்த வீட்டையும் தனது கணவரையும் ஒதுக்கி வருவதாக இதன் மூலம் செய்திகள் பரவி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.