அத்துமீறிய ரசிகர்…. விமான நிலையத்தில் ராஷ்மிகாவுக்கு நடந்த கொடுமை!

அத்துமீறிய ரசிகர்…. விமான நிலையத்தில் ராஷ்மிகாவுக்கு நடந்த கொடுமை!

ராஷ்மிகா மந்தனா நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முதலில் கன்னட சினிமாவில் க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

இவர் தமிழ் , தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா நட்சத்திர நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார்.

தமிழில் சுல்தான் திரைப்படதில் நடித்து நடிகையானார். கடைசியாக இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரது விமர்சனத்திற்கும் உள்ளாகினார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகாவிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறிய செயல் பலரது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Rashmika: படங்களில் நடிக்க 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறேனா? - ராஷ்மிகா  மந்தனா அளித்த விளக்கம் |Rashmika Mandanna hits back at rumours of salary -  Vikatan

ஆம், மும்பை விமான நிலையத்திற்கு வந்த ராஷ்மிகாவை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் அவருடன் இணைந்து செல்பி எடுத்துள்ளார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவின் கையை பிடித்து செல்பி கேட்க ஒரு நிமிடம் அசௌகரியமாக உணர்ந்தார். இருப்பினும் கோபத்தை வெளிப்படுத்தாமல் புன்னகையுடன் கடந்து சென்றார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://x.com/BibleeRashmika/status/1811622911603544122?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1811622911603544122%7Ctwgr%5Ea6d4f8bcc4e514c4aecb75b45c5f930ee30cf771%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Ffans-misbehaved-with-rashmika-mandanna-1720856894