தெலுங்கு படத்துல நடிச்ச போது… மோசமான அனுபவத்தை கூறிய “வாத்தி” நடிகை!

தெலுங்கு படத்துல நடிச்ச போது… மோசமான அனுபவத்தை கூறிய “வாத்தி” நடிகை!

கேரளாவை சேர்ந்தவரான சம்யுக்தா மேனன் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் களரி திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆன சம்யுக்தா மேனன் தனுஷுக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதற்கான அங்கீகாரமும் அவருக்கு கிடைத்தது

இதற்கு முன்னர் அவர் 2016 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியாகிய பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த வந்தார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மலையாள படத்தில் நடிக்கும் போது பெரிதாக மேக்கப் இல்லாமல் தான் நடிப்பேன். ஆனால் தெலுங்கு சினிமாவில் அப்படி இல்லை…நிறைய மேக்கப் போட்டுக் கொண்டு நடிக்க வேண்டும். ஒரு காட்சியில் நான் மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு தயாராக இருந்த சமயத்தில் திடீரென காஸ்டியூமர் நான் சேலை சரியாக கட்டவில்லை என கூறி அதை கட்டிவிட்டு கொண்டிருந்ததார்.

எனக்கு கவனம் முழுக்க அதிலே சென்றது. அந்த சமயத்தில் என்னால் நடிக்க முடியவில்லை இதை நான் சொல்வதற்கு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் இதுதான் விஷயம் நடிகைகளால் ஒரே நேரத்தில் பல கோணங்களில் மனதை சிந்திக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார் சம்யுக்தா மேனன்.