எத்தனை கோடி கொடுத்தாலும் அப்படி நடிக்கமாட்டேன் – சாய் பல்லவி!

எத்தனை கோடி கொடுத்தாலும் அப்படி நடிக்கமாட்டேன் – சாய் பல்லவி!

பிரபல நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை சாய் பல்லவி. இவர் முதன் முதலில் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் .முதல் படத்திலேயே நேச்சுரல் பியூட்டியாக மலர் டீச்சர் ஆக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து சென்றார் சாய்பல்லவி.

தொடர்ந்து அவருக்கு தெலுங்கு, மலையாளம், மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தார். இவர் நடிகை ஆவதற்கு முன் கலைஞர் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்றுகிறார். இவர் நடிகை ஆவதற்கு முன்னர் பள்ளி பருவத்திலேயே பல்வேறு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். அதன் பின்னர் திரைப்பட வாய்ப்பு கிடைக்க தாம் தூம் திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.

பின்னர் ஹீரோயின் ஆனார் சாய் பல்லவி. மிகப்பெரிய நட்சத்திர நடிகை ஆவதற்கு பிறகு அழகு சாதன பொருளின் பிராண்ட் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி இடம் கேட்டிருக்கிறார்கள். அதற்காக அவருக்கு 2 கோடி சம்பளமாக கொடுக்கிறேன் எனவும் பேசியிருக்கிறார்கள்.

ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் அதுபோன்ற விளம்பரங்களில் நான் நடிக்கவே மாட்டேன். நான் நேச்சுரல் ஆகவே இருக்க நினைப்பவர் . என்னுடைய ரசிகர்களை மட்டும் அதுபோன்று அழகு சாதன பொருட்களில் நடித்து அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. அது மட்டும் இல்லாமல் நான் மருத்துவர் என்பதால் அது போன்ற அழகு சாதன பொருட்கள் நம்முடைய ஸ்கின்னுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்தவள் என்பதால் நான் ஒருபோதும் அது போன்ற நடிக்கவே மாட்டேன் என கறாராக கூறிவிட்டாராம்.