ஜெயம் ரவி என் client….விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பிறகு தான் என்னிடம் வந்தார் – பாடகி கெனிஷா!

ஜெயம் ரவி என் client….விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பிறகு தான் என்னிடம் வந்தார் – பாடகி கெனிஷா!

சமீப நாட்களாக கோலிவுட்டில் அடுத்தடுத்த விவாகரத்துகள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தனுஷ் – ஐஸ்வர்யா, மற்றும் ஜிவி பிரகாஷ் சைந்தவி ஜோடியின் சமீபத்திய விவாகரத்து விவகாரங்கள் கோலிவுட் முழுக்க பெரும் பரபரப்பாக பேசப்பட்டு சற்று ஆய்ந்து ஓய்ந்தது.

இப்படியான நிலையில் தற்போது பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த நடிகர் ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி ஜோடி தற்பொழுது விவாகரத்தை அறிவித்துவிட்டார்கள். அண்மையில் ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக மனைவியுடனான விவாகரத்தை அறிவித்தார்.

அதன் பிறகு ஜெயம் ரவி பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் ரகசியமாக உறவு கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி பரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்திருக்கும் கெனிஷா “ஜெயம் ரவிக்கும் தனக்கும் இருக்கும் நட்பு என்பது professional ஆக மட்டும் தான். அவர் என்னுடைய நண்பர், client அவ்வளவு தான்” என கூறி இருக்கிறார்.

“அவர்கள் விவாகரத்துக்கு நான் காரணம் என சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். அவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டு தான் என்னிடம் வந்தார். இது உங்க வீட்டு பிரச்சனை இல்லை, வேறொருவரின் குடும்ப பிரச்சனை. அதில் இருந்து விலகி இருங்கள். இரண்டாவது – என்னை இதில் இழுக்காதீர்கள். எனக்கு வேலை இருக்கிறது, அதற்கு நேரம் இல்லை” என கெனிஷா பிரான்சிஸ் கூறி இருக்கிறார்.

ஜெயம் ரவி , jeyam ravi, cinema news , kenishaa Francis,

kenishaa-francis-reacts-to-rumour-about-jayam-ravi