நானும் என் குழந்தைகளும் தவித்துக்கொண்டிருக்கிறோம் – ஜெயம் ரவி மனைவி வேதனை!

நானும் என் குழந்தைகளும் தவித்துக்கொண்டிருக்கிறோம் – ஜெயம் ரவி மனைவி வேதனை!

சமீப நாட்களாக கோலிவுட்டில் அடுத்தடுத்த விவாகரத்துகள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தனுஷ் – ஐஸ்வர்யா, மற்றும் ஜிவி பிரகாஷ் சைந்தவி ஜோடியின் சமீபத்திய விவாகரத்து விவகாரங்கள் கோலிவுட் முழுக்க பெரும் பரபரப்பாக பேசப்பட்டு சற்று ஆய்ந்து ஓய்ந்தது.

இப்படியான நிலையில் தற்போது பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த நடிகர் ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி ஜோடி தற்பொழுது விவாகரத்தை நோக்கி உள்ளனர். நேற்று ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக மனைவியுடனான விவாகரத்தை அறிவித்தார்.

அதில் “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும் திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும் திரை துறை நண்பர்கள், பத்திரிகை ஊடக துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரந்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் தனிப்பட்ட விஷயமாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி.” என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மனைவி ஆர்த்தி என் கணவர் ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது என் கவனத்துக்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்ட முடிவு என்றும், திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே என்றும், தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

aarthi, jeyam ravi, ஆர்த்தி, விவாகரத்து, ஜெயம் ரவி