“என் மீது அனுதாபம் வேண்டாம்” விஜய் ஆண்டனி வேதனை!

“என் மீது அனுதாபம் வேண்டாம்” விஜய் ஆண்டனி வேதனை!

இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தான் விஜய் ஆண்டனி. இவர் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியும் இசையமைத்தும் பிரபல இசையமைப்பாளராக தமிழ் திரைப்படத்தின் மூலமாக இவரது கேரியர் கடந்து 2005 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.

பல்வேறு படங்களுக்கு இவரை இசை அமைத்திருக்கிறார். ஹீரோ என எடுத்துக்கொண்டால் இவர் முதன் முதலில் நான் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு சலீம், பிச்சைக்காரன், சைத்தான் எமன், அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன்,பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவரது மூத்த மகள் மீரா மன உளைச்சல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்து விட்டார். இதை அடுத்த விஜய் ஆண்டனி மீது பலரும் அனுதாபம் காட்டி பரிதாபமாக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் அது குறித்து சமீபத்தில் பேட்டிகளில் பேசிய விஜய் ஆண்டனி என்மேல் அனுதாபம் காட்ட அவசியம் இல்லை. நான் ரொம்ப நல்லா இருக்கேன். எனக்கு என்ன கார்ல வந்து இறங்குறேன் வீட்ல ஏசி இருக்கு இவ்ளோ வசதியா நான் வாழ்ந்துட்டு இருக்கேன். ஆனால் என்னைவிட எவ்வளவு மனிதர்கள் ரொம்பவும் கஷ்டப்படுறாங்க. காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் உழைக்கிறாங்க வெறும் 150 ரூபாய் கூலிக்காக எனவே யாரும் என்மீது பரிதாபம் காட்ட வேண்டாம் என்று விஜய் ஆண்டனி பளீச்சென கூறி இருக்கிறார்.