நான் மூன்று பெண்களுடன்…. 56 வயசாகியும் திருமணத்தை வெறுக்கும் SJ சூர்யா! ஏன் தெரியுமா?

நான் மூன்று பெண்களுடன்…. 56 வயசாகியும் திருமணத்தை வெறுக்கும் SJ சூர்யா! ஏன் தெரியுமா?

திரைப்பட இயக்குனரும் நடிகரும் ஆன எஸ் ஜே சூர்யா தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தி இருப்பவர் குறிப்பாக வில்லன் தோற்றத்திற்கு பக்காவாக பொருந்தும் எஸ் ஜே சூர்யா சமீப நாட்களாக அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லலாம்.

தொடர்ச்சியாக அடுத்தடுத்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தில் கூட சமீபத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்கள் 56 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருப்பதற்கு என்ன காரணம்? என கேட்டதற்கு அவர் நான் கிட்டத்தட்ட மூன்று பெண்களை காதலித்து ஏமாற்றப்பட்டேன்.

அதற்கு மேல் மீண்டும் காதலித்து திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. அதனால், அந்த மூன்று காதலிகள் என்னை விட்டு சென்றதால் தான் நான் இப்போது சிங்கிளாக மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன் சுதந்திரமாக இருக்கிறேன். எனவே என்னுடைய காதலிகளுக்கு மிக்க நன்றி என கூற அந்த அரங்கமே கைத்தட்டலால் சிரிப்பொலியால் அதிர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.