அக்காவின் அன்பில் கலங்கி அழுத நகுல்… அபூர்வமான காட்சி இதோ!

அக்காவின் அன்பில் கலங்கி அழுத நகுல்… அபூர்வமான காட்சி இதோ!

நல்ல திறமை இருந்தும் தமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரம் மிகப்பெரிய அளவில் கிடைக்காமல் தத்தளித்து வருபவர்தான் நடிகர் நகுல். இவர் பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.

பிரபல நடிகையான தேவயானி தம்பியான இவர் தற்போது வாஸ்கோடகாமா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் நகுலுடன் சேர்ந்து கே எஸ் ரவிக்குமார், அறிவழகன், தேவயானி, அர்த்தனாபினு, பாடகர் ஆண்டனி தாசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

முதன்முறையாக தேவயானி மற்றும் நகுல் இருவரையும் ஒரே மேடையில் பார்த்த ரசிகர்கள் அந்தண் வீடியோக்களை வைரலாக்கினர். தேவயானி மேடையில் தனது தம்பி குறித்து பேசியபோது, நகுல் பற்றி நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது.

பாய்ஸ், காதலில் விழுந்தேன் படத்தில் அவன் திறமையைப் பார்த்து வியந்து போனேன். அவனுக்கு நல்ல கதை, இயக்குநர், ஸ்கிரிப்ட் தேவை. அவனுக்கான அந்த நேரம் வர வேண்டும். மேலும், என் தம்பி என்பதற்காக சொல்லவில்லை.

அக்கா – தம்பி இருவரும் ஒரே துறையில் இருப்பது ரொம்ப அபூர்வமானது. இந்த நேரத்தில் எங்கள் அப்பா, அம்மா இருந்தால் ரொம்ப சந்தோசமாக இருப்பாங்க. நாங்கள் பண்ணும் ஒவ்வொரு விஷயமும் அவங்களுக்கு போய் சேர வேண்டும். எப்போதும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். இன்னும் நிறைய படங்கள் பண்ணி உன்னை நீ நிரூபிக்க வேண்டும்.

வெற்றியாளர்கள், ஹீரோ வரிசையில் விரைவில் நகுல் இருக்க வேண்டும். நான் அக்கா இல்லை. அவனுக்கு அம்மா தான். நான் அவனோடு விளையாடியதில்லை. சண்டை போட்டதில்லை. நிறைய உணர்வுகளை இழந்திருக்கிறோம்” என தெரிவித்தார். நகுல் கலங்கி அழுது தேவயானியை கட்டிப்பிடித்து வெளிப்படுத்தினார்.