2 ஆண்களை வெட்டி சூட் கேசில் போட்டு பாலத்தில் மேல் வைத்த நபர் இவரா ? பொலிஸ் வேட்டை ஆரம்பம்

2 ஆண்களை வெட்டி சூட் கேசில் போட்டு பாலத்தில் மேல் வைத்த நபர் இவரா ? பொலிஸ் வேட்டை ஆரம்பம்

நேற்றைய தினம், பிரிட்டனின் கிளிப்ஃடன் பாலத்தின் மேல் 2 சூட் கேஸ் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் மனித உடல் பாகம் பாகமாக வெட்டப் பட்ட நிலையில் காணப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன் நிலையில். இந்த 2 சூட் கேசில் 2 ஆண்களின் சடலம் வெட்டி துண்டாடப்பட்ட நிலையில் கிடந்ததாக சற்று முன்னர் பொலிசார் அறிவித்துள்ளார்கள். இதேவேளை அருகே இருந்த CCTV கமராக்கள் மற்றும் வீட்டு வாசலில் உள்ள CCTV கமரா அனைத்தையும் பொலிசார் கண்காணித்து.

ஒரு சந்தேக நபரை அடையாளம் கண்டு பிடித்துள்ளார்கள். குறித்த நபர் லண்டன் நோக்கிச் சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ள பொலிசார் அந்த பரை பிடிக்க பெரும் வேட்டை ஒன்றைத் தொடங்கியுள்ளார்கள். இவர் மிகவும் ஆபத்தான நபர் என்று பொலிசார் கூறியுள்ள அதேவேளை. இவரைக் கண்டால் கிட்ட நெருங்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்கள்.

இது இவ்வாறு இருக்க வெட்டப்பட்ட அந்த 2 ஆண்களும் யார் என்பது இன்று வரை தெரியவில்லை. இந்த 2 ஆண்களையும் கொலை செய்து. பின்ன துண்டு துண்டாக வெட்டி, 2 சூட்கேசில் போட்டுள்ளார் கொலையாளி. இதனை பாலத்தில் இருந்து தள்ளி விடவே அவர் முனைந்துள்ளார். ஆனால் அது ஏனோ நடக்கவில்லை. அங்கே அவர் சிலரைப் பார்த்து, பயந்து , சூட்கேசை தள்ளி விடாமல் , அந்த இடத்திலேயே விட்டுச் சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் கிளிப்ஃடன் பாலத்தில் இந்த நபரை யாராவது பார்த்திருந்தால், தகவல் தர முன்வருமாறு பொலிசார் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.