“எந்திரன்” திரைப்படத்திற்கு பாட்டு பாட இருந்த மைக்கல் ஜாக்சன்…. கடைசியில்!

“எந்திரன்” திரைப்படத்திற்கு பாட்டு பாட இருந்த மைக்கல் ஜாக்சன்…. கடைசியில்!

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எந்திரன் திரைப்படத்தில் அவர் பாட்டு பாட இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ ஆர் ரகுமான் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த பேட்டியில் ஏ ஆர் ரகுமான் பேசியதாவது. நான் கடந்த 2009 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலில் உள்ள மைக்கேல் ஜாக்சனை சந்தித்தேன்.

அவர் மிகவும் அன்பானவர். நாங்கள் இருவரும் இசை குறித்து நிறைய விஷயங்களை பேசினோம். அதன் பிறகு அவருடைய குழந்தையை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவரை சந்தித்து விட்டு நான் இந்தியா சென்றதும் சங்கர் சார் சந்தித்து மைக்கல் ஜாக்சன் பற்றி சொன்னேன். உடனே அவர் எந்திரன் படத்தில் மைக்கேல் ஜாக்சன் பாடினால் எப்படி இருக்கும் என்று கேட்டார்.

அதற்கு நான் மைக்கேல் தமிழில் பாட்டு பாடுவாரா? என்று சந்தேகித்தேன். உடனே அடுத்த கட்ட ஏற்பாடுகள் தயார் செய்து மைக்கேல் ஜாக்சனை எந்திரன் திரைப்படத்தில் பாட்டு பாட வைக்க நாங்கள் முயற்சிகள் செய்து வந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக அதற்குள் மைக்கேல் ஜாக்சன் உடல் நல குறைவு காரணமாக காலமாகிவிட்டார். ஒரு வேலை அவர் உடல் நலம் குறைவில்லாமல் நன்றாக இருந்திருந்தால் நிச்சயமாக கண்டிப்பாக ரஜினியின் எந்திரன் திரைப்படத்தில் பாடல் பாடியிருப்பார். அந்த பாடல் இன்றுவரை காலத்தால் அழியாததாக தமிழ் சினிமாவில் இருந்திருக்கும் என ஏ ஆர் ரகுமான் இந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.