7,500 மைல் செல்லக் கூடிய அணு குண்டு ஏவுகணையை பரிசோதனை செய்த ரஷ்யா பரபரப்பில் மேற்க்கு உலகம்

7,500 மைல் செல்லக் கூடிய அணு குண்டு ஏவுகணையை பரிசோதனை செய்த ரஷ்யா பரபரப்பில் மேற்க்கு உலகம்

இதுவரை அமெரிக்கா சீனா போன்ற நாடுகள், சுமார் 6,000 மைல் தொடக்கம் 6,500 மைல் தூரம் வரை சென்று தாக்க வல்ல ஏவுகணைகளையே வைத்திருக்கிறது. ஆனால் ரஷ்யா தற்போது 7,500 மைல் தொலைவு சென்று, துல்லியமாக தாக்க வல்ல அணு குண்டு ஏவுகணையை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இந்தப் பரிசோதனை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றதை அடுத்து, மேற்கு உலக நாடுகள், அதிர்ச்சியில் உள்ளது.

குறிப்பாக இந்த கண்டம் விட்டுக் கண்டம் பாயும், அணு குண்டு ஏவுகணை மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்த வல்லவை. இதனால் நேட்டோ நாடுகள் தமது பாதுகாப்பை மேலும் அதிகப் படுத்த வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்று தான் கூறவேண்டும். புட்டின் ஆட்சியின் கீழ் ரஷ்யா, அடிக்கடி அணு குண்டுப் பரிசோதனைகளை நடத்தி வருவதோடு.

மேற்கு உலக நாடுகள் மீது தாக்குதல் நடத்துவேன் என்று அடிக்கடி கூறி வரும் புட்டின், இதற்கான ஒத்திகைகளையும் பார்த்து வருவது உலக அமைதியை சீர் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது.