ரஜினி கூட ஏன்டா நடிச்சோம்னு வருத்தப்பட்டேன் – ரம்யா கிருஷ்ணன்!

ரஜினி கூட ஏன்டா நடிச்சோம்னு வருத்தப்பட்டேன் – ரம்யா கிருஷ்ணன்!

வில்லி கதாபாத்திரம் காமெடி கதாபாத்திரம் ஹீரோயின் என எது கொடுத்தாலும் தன்னுடைய நடிப்பை பின்னி பெடல் எடுத்து விடுவார் ரம்யா கிருஷ்ணன். ரம்யா கிருஷ்ணனின் நடிப்பில் ஒரு வித்தியாசம் இருக்கும்.

அவர் ஒவ்வொரு கதையிலும் அந்த கதைக்கு ஏற்றவாறு அந்த கதா பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பது தான் அவரது தனிச்சிறப்பு என்றே சொல்லலாம். அதனாலே அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்படும் குறிப்பாக பாகுபலி திரைப்படத்தில் சிவகாமி தேவியாக நடித்து அந்த கேரக்டர் மக்கள் மனதில் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதேபோல் வில்லியாக ரஜினியுடன் படையப்பா திரைப்படத்தில் நடித்திருந்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு தமிழ் சினிமா வரலாற்றிலே பெரும் சாதனை படைத்த படமாக அந்த பார்க்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் படையப்பா படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவத்தை குறித்து பேசினார் ரம்யா கிருஷ்ணன்.

படையப்பா படத்தில் நீலாம்பரி ரோல் மிகவும் நெகட்டிவ்வான ரோல். அதில் நான் முதலில் நடிக்க ரொம்ப யோசித்தேன். அதன் பிறகு சரி ரஜினியுடன் நடிக்கிறோம் என்ற ஆசையில் நடித்து வந்தேன். ஆனால் சூட்டிங் நடக்கும்போதெல்லாம் இந்த படத்தில் ஏன் கமிட் ஆகினோம் என்ற ஒரு வேதனை இருந்து கொண்டே இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு அது மொத்தமும் மாறிவிட்டது. அதற்கு முன் நான் நடித்த அத்தனை படத்தை விட படையப்பா திரைப்படம் எனது மார்க்கெட் உச்சத்தில் கொண்டு போய் வைத்தது என ரம்யா கிருஷ்ணன் தெரிவித்தார்.