அஜித் நோ சொன்னா நோ தான்! மகிழ்திருமேனியை விரட்டும் தல

அஜித் நோ சொன்னா நோ தான்! மகிழ்திருமேனியை விரட்டும் தல

தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் முழுப் படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்த அஜித் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் வெளி நாடு சென்றிருக்கிறார்.

அங்கு இருக்கும் ரூல்ஸ் படி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு கிழமைகளில் உழைப்பாளர்களுக்கு விடுமுறைதினமாம். அதனால் படப்பிடிப்பை இதை காரணம் காட்டி இரு நாள்களுக்கு நிறுத்த முடியாது என்பதால் தனிச் சலுகை பெற முடியுமா என்று கேட்க உள்ளதாக சமீபத்தில் சில செய்திகள் வெளியானது.

வெளி நாட்டில் படப்பிடிப்பு வைத்தாலே இது போன்ற சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதே போல் அஜர்பைஜானில் இப்போது மாலை நேரத்தில் கடுங்குளிர் ஏற்படுகிறதாம்.பொதுவாக வெளி நாட்டில் படப்பிடிப்பிற்கு செல்லும் குழுக்கள் தங்களை ரிலாக்ஸ் செய்ய மது, அசைவ உணவுகளை விரும்புவது வழக்கம்.

ஆனால் அஜித் அசைவ உணவுகளை தவிர்த்து வருகிறார். மதுவுக்கு நோ சொல்லிவிட்டாராம். அதனால் படப்பிடிப்பை சூரியன் இருக்கும் நேரத்திலேயே முடிக்கும் படி மகிழ்திருமேனியை விரட்டி வருகிறாராம். குளிர் ஏற்பட்டால் தாங்க முடியாத குளிராம்.

அந்த நேரத்தில் அப்படி இப்படி இருந்தால் தான் குளிர் இருப்பது தெரியாது. ஆனால் அஜித் தற்போதுதான் எல்லாவற்றிற்கும் நோ சொல்லியிருப்பதால் படப்பிடிப்பை விரைவு படுத்தி வருகிறாராம். இதனால் மகிழ்திருமேனிக்கு கொஞ்சம் நெருக்கடி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.