BREAKING NEWS: ரஷ்யாவுக்கு உள்ளே 100மைல் வரை ஊடுருவியுள்ள உக்ரைன் படைகள்….. ரஷ்யா அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது

BREAKING NEWS: ரஷ்யாவுக்கு உள்ளே 100மைல் வரை ஊடுருவியுள்ள உக்ரைன் படைகள்….. ரஷ்யா அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது

உக்ரைன் படைகள், ரஷ்ய எல்லையில் உள்ள முதல் கட்ட பாதுகாப்பு வலையத்தை உடைத்துக் கொண்டு, ரஷ்யாவுக்கு உள்ளே சுமார் 20 மைல் தொலைவை அடைந்துள்ளது என்ற திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது. சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற செய்திகளின் அடைப்படையில் உக்ரைன் படைகள், கேஷ் என்னும் ரஷ்ய நகரை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளது. இதனை ரஷ்யா சற்றும் எதிர்பார்கவில்லை.

இதனால் ரஷ்ய அதிபர் உடனடியாக அமெரிக்காவை தொடர்புகொண்டு, கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு. ரஷ்யாவில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியும் உள்ளார் புட்டின். இன் நிலையில் ரஷ்யா அணு குண்டை உக்ரைன் மீது பாவிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது இவ்வாறு இருக்க, பனை மரத்தில் இருந்து விழுந்தவன் மீது மாடு முட்டி மோதிய கதையாக. உக்ரைன் ஆளில்லா விமான அணி ஒன்று, திரண்டு சென்று ரஷ்யாவின் விமானத் தளத்தை தாக்கி அழித்துள்ளதால்.

அங்கே தரித்து நின்ற ரஷ்யாவின் அதி நவீன எஸ்-யூ விமானங்கள், மிக், மற்றும் F16 ரக விமானங்கள் பல தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யா கணிசமான அளவு தனது விமானப் படையை இழந்துள்ளது என்று அமெரிக்க செய்திச் சேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் கடும் போர் ஒன்று என் நேரமானாலும் வெடிக்க பெரும் வாய்ப்புகள் உள்ளது. இந்த ஊடுருவலை காரணம் காட்டி , புட்டின் சிறிய ரக அணு குண்டை உக்ரைன் மீது ஏவக் கூடும் என்றும் எதிர்வு கூறப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் பெரும் யுத்தம் ஒன்று வெடிக்க வாய்ப்புகள் உள்ளது.