ரகுவரன் மகனா இது? ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்துட்டாரே!

ரகுவரன் மகனா இது? ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்துட்டாரே!

ஒரு காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகராக இருந்து வந்த ரகுவரன் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மிரட்டலான வில்லன் நடிகராக நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார். கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகராக சிறந்து விளங்கி வந்த ரகுவரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது வாழ்க்கையை இழந்து விட்டார்.

இவர் பிரபல நடிகையான ரோகிணியை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவருக்கு ஒரு மகன் பிறந்தார். இதனுடைய மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்று விட்டார்கள். ரகுவரன் போதைக்கு அடிமையாகி உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு காலமானார்.

ரகுவரனின் நடிப்பு பாட்ஸா ,முதல்வன், ரட்சகன், முகவரி, சம்சாரம் அது மின்சாரம், ஏழாவது மனிதன் இந்த திரைப்படங்களில் அவரது அபார தனமான வில்ல நடிப்பு இன்றளவும் ரசிகர்களால் மறக்கவே முடியாது. செய்துக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது வில்லன் நடிகர் ரகுவரன் மகன் ரிஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 25 வயதாகும் அவர் பார்ப்பதற்கு அப்படியே அப்பாவை உரித்து வைத்தது போல் இருக்கிறார் என ரசிகர்கள் கருது கூறி வருகிறார்கள். இவர் இசையில் அதிகம் ஆர்வத்தை செலுத்தி வருவது குறிப்பிடதக்கது.