அட்லீ என்னை யூஸ் பண்ணிகிட்டாரு… நம்பி ஏமாந்துவிட்டேன் – பகீர் கிளப்பும் சாக்ஷி!

அட்லீ என்னை யூஸ் பண்ணிகிட்டாரு… நம்பி ஏமாந்துவிட்டேன் – பகீர் கிளப்பும் சாக்ஷி!

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் விளம்பர திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்து . அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கி பிரபலமான நடிகையானார். முஇதன்முதலில் அவர் நடித்த படம் அட்லீ இயக்கிய ” ராஜா ராணி” படம் தான்.

இந்நிலையில் ராஜா ராணி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ள சாக்ஷி, நான் மாடலிங் செய்து வந்து சமயத்தில் “ராஜா ராணி” படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. என்னுடைய காஸ்டிங் ஏஜென்சி மூலமாக என்னை தொடர்பு கொண்டு ராஜா ராணி படத்தில் நடிப்பது பற்றி பேசினார்கள்.

அவர்கள் என்னிடம் ஆர்யா ஹீரோ, நீங்கள் இரண்டாம் ஹீரோயின் என சொன்னார்கள். அவர்கள் கூறியது போல இரண்டு நாள் ஷூட்டிங் சென்றேன். அதை அடுத்து அவர்கள் என்னை அழைக்கவில்லை. கடைசியில் பார்த்தால் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு ரிலிஸ் ஆகிவிட்டது. என்னுடைய ரோல் ரொம்ப மோசமா எடுத்து வச்சியிருந்தாங்க. அட்லீ என்னை நம்ப வைத்து ஏமாற்றினார் என சாக்ஷி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.