சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்..

சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படத்துக்கு படைத்தலைவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வால்டர், ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிப்பதாக தகவல் வெளியானது.

இப்படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து, கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தை டிரைக்டர்ஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் சண்முகபாண்டியனின் தந்தை விஜயகாந்த் காலமானபோது, சண்முகபாண்டியனுக்கு உதவி செய்வதற்காக அவர் படத்தில் கௌரவ வேடத்தில் தான் நடிக்க தயார் என ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது அவருக்காக படைத்தலைவன் படத்தில் ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு, அதில் மூன்று நாட்கள் அவர் நடிக்க உள்ளாராம். விரைவில் அவருக்கான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக சொலல்ப்படுகிறது.