நான் ஒன்றும் பொது சொத்து கிடையாது…. கோபத்தில் கொந்தளித்த டாப்ஸி!

நான் ஒன்றும் பொது சொத்து கிடையாது…. கோபத்தில் கொந்தளித்த டாப்ஸி!

பிரபல நட்சத்திர நடிகை டாப்ஸி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.குறிப்பாக இவர் ஹிந்தியில் அதிகம் திரைப்படங்களில் நடித்த அங்கு பாலிவுட்ல நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் தனுஷின் ஆடுகளம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தொடர்ந்து வந்தான் வென்றான், முனி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், அனபெல் சேதுபதி உள்ளிட்ட திரைப்படங்கள் நடித்திருக்கிறார். இதனிடையே அவர் அண்மையில் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் புகைப்படக் கலைஞர்களான Paparazzi பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்களை துரத்தி துரத்தி சென்று போட்டோ எடுப்பது குறித்து டாப்ஸி, “நான் பிரபலமான ஒரு நபர் தானே தவிர பொது சொத்து கிடையாது.

திரைக்கு பின் இருக்கும் பெண்கள் No என்றால் No. ஆனால் அதுவே ஒரு நடிகை கூறினால் ஏற்கமாட்டர்கள். நான் முதலில் பெண் அதன் பின்தான் நடிகை.நான் இப்படி சொல்வதால் இது எனக்கு ஏற்ற தொழில் கிடையாது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நடிப்பு என்பது நான் விரும்பும் தொழில் என்று காட்டமாக பேசியிருக்கிறார்.

நடிகை டாப்ஸி , taapsee pannu , Actress news , Bollywood news