பிரிட்டன் மண்ணில் ரஷ்ய உளவாளிகள், ராணுவத் தளங்கள் மீது ட்ரோன்களை விட்டு நோட்டம் !

பிரிட்டன் மண்ணில் ரஷ்ய உளவாளிகள், ராணுவத் தளங்கள் மீது ட்ரோன்களை விட்டு நோட்டம் !

பிரித்தானியாவில் உள்ள ராணுவத் தளம் ஒன்றின் மீது, அதி நவீன ஆளில்லா விமானம் ஒன்று பறந்து நோட்டமிட்டுள்ளது. குறித்த விமானத்தை பிரிட்டன் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ள நிலையில். இதனை இயக்கிய நபர்கள், மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார்கள். ஆனால் அந்த விமானத்தை ஆராய்ந்ததில் அது ரஷ்ய தயாரிப்பு என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை ரஷ்யா செய்ய என்ன காரணம் ?

அது பிரிட்டன் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் என பலரும் நினைக்கலாம். அதுவல்ல விடையம். பிரித்தானிய ராணுவத் தளங்களில் உக்ரைன் படைகளுக்கு பயிற்ச்சி கொடுக்கப்பட்டு வருவதாக ரஷ்யா நம்புகிறது. இது மிகவும் ரகசியமாக நடப்பதாக ஒரு தகவல் பல மாதங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இதனை உறுதிசெய்யவே ரஷ்யா தற்போது முனைப்புக் காட்டி வருகிறது.

அப்படி பிரித்தானிய மண்ணில் உக்ரைன் படைகளுக்கு, பிரிட்டன் பயிற்ச்சிகளைக் கொடுக்கும் என்றால் அது ரஷ்யாவோடு நேரடியாக மோதுவதற்கு சமன் என்ற கோட்பாட்டில் ரஷ்யா மேலும் பிரித்தானியாவுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கும். இதற்கு ஆதாரம் தேவை இல்லையா. அதற்காகத் தான் இந்த ஆளில்லா வேவு விமான முயற்ச்சி. இருப்பினும் பிரித்தானிய உளவுப்படையான MI5 மற்றும் MMI6 இந்த ரஷ்ய உளவாளிகளை தேடும் கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.