இளவரசர் பிலிப் சாவு வீட்டுக்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் ஆண் நபருடன் ஹோட்டல் ரூம் போட்ட எட்வாட் !

இளவரசர் பிலிப் சாவு வீட்டுக்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் ஆண் நபருடன் ஹோட்டல் ரூம் போட்ட எட்வாட் !

பிரித்தானிய மகாராணியின் கணவர், இளவரசர் பிலிப் இறந்து அவரது சாவு வீடு நடக்க இருந்த நிலையில். அதனை கவர் பண்ணும் மிகப் பெரிய பொறுப்பு BBC தொலைக்காட்சிக்கே வழங்கப்பட்டு இருந்தது. அன்றைய தினம் மிகவும் பெரும் எடுப்பில் நடைபெற்ற இந்த சாவு வீட்டு நிகழ்வைப் பற்றி முக்கியமாக பேசியவர் BBC செய்தி வாசிப்பாளர் எட்வாட். ஆனால் அதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, அவர் இளம் தயாரிப்பாளர் ஒரு ஆணுடன் தொடர்பு கொண்டு. தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

என்ன செய்வது அஜஸ்ட் (விட்டுக் கொடுத்தால் தான்) BBC ல் சான்ஸ் கிடைக்கும் என்று அந்த இளம் தயாரிப்பாளர் எட்வாட் அறைக்குச் சென்றுள்ளார். உலகப் புகழ்வாய்ந்த BBC செய்தியாளர் எட்வாட் தற்போது பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். சிறுவர்களின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்திருந்தார் என்று, பொலிசார் ஒரு நபரைக் கைதுசெய்து அவரை விசாரித்து வந்த நிலையில். அவரது மோபைல் போனை பொலிசார் பார்த்தவேளை, அன் நபர் எட்வாட்டுக்கு பல புகைப்படங்களை அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து மிகவும் ரகசியமாகச் சென்று BBC புகழ் எட்வாட்டை பொலிசார் கைதுசெய்து அவரது மோபைல் போனை ஆராய்ந்தால், 7வயதுச் சிறுவர்கள் தொடக்கம் 16 வயதுச் சிறுவர்கள் வரை சுமார் 39 அசிங்கமான புகைப்படங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள். பிரித்தானிய மகாராணியின் கணவர் இறந்து, சாவு வீடு நடக்கும் பட்சத்தில், அது எவ்வளவு முக்கிய நிகழ்வு என்று அவருக்கே தெரியும். அப்படி இருந்தும் கூட சைகிள் கேப்பில், ஒரு ஆணுடன் உல்லாசமாக இருந்துள்ளார் எட்வாட். திருமணம் முடித்து 5 பிள்ளைகளைப் பெற்ற எட்வாட் நிலை தற்போது மிகவும் கவலைக்கு இடமாக உள்ளது. அது போக பிரித்தானியா ஊடகமான “டெயிலி மிரர்” பல தகவல்களை பொலிசாரிடம் இருந்து பெற்று பிரசுரித்து வருகிறார்கள்.

கிழி .. கிழி என்று கிழித்து தொங்கவிடாமல் அவர்கள் இருக்கப் போவது இல்லை. குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.