நான் 10 பேரை திருமணம் செய்துள்ளேன் – அதிரவைத்த அஞ்சலி!

நான் 10 பேரை திருமணம் செய்துள்ளேன் – அதிரவைத்த அஞ்சலி!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான அஞ்சலி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் 2007 ஆம் ஆண்டில் கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார்.

முதல் படமே அவருக்கு ஏகோபித்த வரவேற்பை கொடுத்தது மட்டுமே இல்லாமல் சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது பெற்று கௌரவிக்கப்பட்டார். அதை அடுத்து 2019 அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்து மிகச் சிறந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்து இழுத்தார்.

இந்த திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது அவருக்கு கொடுத்து கவுரவிக்கப்பட்டது. அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் எங்கேயும் எப்போதும், மங்காத்தா, ரெட்டை சுழி, துங்கா நகரம், கலகலப்பு,சேட்டை, வத்திக்குச்சி, இறைவி, தரமணி, பலூன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இதனிடையே இவர் ஜெய் உடன் சில வருடம் லிவிங் லைப்பில் வாழ்ந்து வந்தார். மேலும் பல பேருடன் அஞ்சலி காதல் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்த சமீபத்தை பேட்டி ஒன்றில் கேட்டதற்கு, எனக்கு 10 தடவை மேல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். நான் கண்டிப்பாக திருமணம் என்றால் உங்களுக்கு சொல்லிவிட்டு தான் செய்வேன் என்று ஆதங்கத்துடன் கூறினார்.