தீராத விளையாட்டுப் பிள்ளை பிலிப்.. ராணிக்கு முன்னர் பல பெண்களோடு தொடர்பு FBI அறிக்கை லீக்

தீராத விளையாட்டுப் பிள்ளை பிலிப்.. ராணிக்கு முன்னர் பல பெண்களோடு தொடர்பு FBI அறிக்கை லீக்

அமெரிக்க உளவுத் துறையின் தகவல் ஒன்று தற்செயலாக லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய மகாராணியாக 60 வருடங்கள் ஆட்சி புரிந்த விக்டோரியாவின் ஆசைக் கணவர் பிலிப் அவர்கள், அந்தக் காலத்திலேயே பல பெண்களோடு தொடர்பில் இருந்துள்ளார். அதன் பின்னரே அவர் ராணி விக்டோரியாவை திருமணம் செய்து, இளவரசர் பிலிப் ஆகியுள்ளார்.

இளவரசர் பிலிப் அவர்கள், தொடர்பில் இருந்த 2 பெண்களான கிருஸ்டீன், மற்றும் மாண்டி குறித்த தகவல்களை அமெரிக்க புலனாய்வு நிறுவனம் சேகரித்து 1960களில் பத்திரமாக வைத்திருந்துள்ளது. பிரித்தானிய அரசுக்கு களங்கம் விளைவிக்க கூடாது என்ற நோக்கில் இவர்கள் எந்த தகவலையும் வெளியிடவே இல்லை. இருந்தாலும் இளவரசர் பிலிப் அவர்கள் 1960 கள் தொடக்கம் 2022 வரை மிகவும் சக்திவாய்ந்த நபராக இருந்து வந்துள்ளார்.

இதனால் இந்த தகவலை வைத்து அமெரிக்க எப்.பி.ஐ அவரை வைத்து என்ன காரியங்களை எல்லாம் நிறைவேற்றினார்கள் என்பது ஒரு புறம் இருக்க, தற்போது மகாராணி மற்றும் அவரது கணவர் பிலிப் ஆகியோர் உயிரோடு இல்லை. இதனால் இந்த தகவலை அவர்களே கசிய விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பார்க்க மிகவும் சாதுவாக இருக்கும் நம்ம பிலிப்பா இப்படி என்று பிரித்தானிய மக்கள் அனைவரும் அதிர்ந்து போய் உள்ளார்களாம்.